போலி தகவல் பரப்பிய மற்றுமொருவர் கைது


இலங்கையில் கொரோனாவால் வீதிகளில் மக்கள் விழுந்து உயிரிழப்பதாக சமூக ஊடகங்களில் போலி தகவலை வெளியிட்ட மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயது இளைஞனே இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுவரை நாட்டில் போலி செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகி உள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத குற்றச்சாட்டில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.