மட்டக்களப்பில் வைத்தியரின் ஏ.ரி.எம் அட்டையை திருடிய குடிமகன்!!

 


மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடி 20,000 ரூபாவுக்கு மதுபானம் அருந்திய 40 வயதுடைய நபர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் உத்தரவிட்டார்.

குறித்த வைத்தியரின் ஏ.ரி.எம் அட்டை காணாமல் போய்யுள்ள நிலையில், மதுபானக் கடை இரண்டில் 20,000 ரூபாவுக்கு மதுபானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவரின் வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்பட்டு வைத்தியரின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மதுபானக் கடைகளுக்குச் சென்று விசாரணை நடத்தியபோது, மட்டக்களப்பு 2 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் அதனை உபயோகித்திருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன், வைத்தியரின் ஏரிஎம். அட்டையை வழங்கி ஒரு கடையில் 10,000 ரூபாவுக்கு பியரும் இன்னொரு மதுபானக் கடையில் 10,000 ரூபாவுக்கு மதுபானத்தையும் கொள்வனவு செய்துள்ளார்.

இதையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.