மிங் விலங்குகளை கொன்று குவிக்கும் ஐரோப்பிய நாடுகள் !


மிங்க் விலங்குகளிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மிங் விலங்குகளை கொன்று குவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கிரேக்கத்தில் மிங்க் விலங்குகள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு அவை புதைக்கப்படும் கோர காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மிங்க் விலங்குகளில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதியே, அவற்றினை தாம் கொல்வதாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் , மிங்க் விலங்குகளிடமிருந்து புதுவகை கரோனா வைரஸ் உருவாவதாகவும் இதனால் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பின்னடைவு ஏற்படும் எனவும் டென்மார்க் பிரதமர் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, டென்மார்க்கில் மிங்க் விலங்குகளால் 11 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 17 மில்லியன் மிங்க் விலங்குகளையும் கொன்று தள்ள முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே, கிரேக்கத்திலும் சில மிங்க் விலங்குகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, சுமார் 2,000 விலங்குகள் கொல்லப்பட்டன.

இதேவேளை சுமார் 1.3 மில்லியன் மிங்க் விலங்குகளுடன் 80 க்கும் மேற்பட்ட பண்ணைகள் வடக்கு கிரேக்கத்தில் மட்டும் அமைந்துள்ளன.

இந்த நிலையில் இங்குள்ள மொத்த மிங்க் விலங்குகளும் கொல்லப்படுமா என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அத்துடன் டென்மார்க், கிரேக்கம் மட்டுமின்றி, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்திலும், மிங்க் விலங்குகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் மட்டுமே 1,139 மிங்க் பண்ணைகள் செயல்பட்டு வரும் நிலையில் உலகின் 40 சதவீத ஃபர் தயாரிப்பு தேவையை டென்மார்க் மட்டுமே பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.