ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய இளம் யுவதி கைது!


ஸ்பெயினின் மாலாகா பகுதியில் பெண் ஒருவர் தனது காரை ஒன்றரை கி.மீ தூரத்திற்கு ரயில் தடங்களில் ஒட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி கமராக்களில் பதிவாகிய நிலையில் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

ரயில்வே சுரங்கப்பாதையின் தொடக்கத்தில் கார் ஒன்று மாட்டியிருப்பதை மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்த நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த காரை மீட்டனர்.

இதன்போது காரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் போதையில் காரை ஓட்டி வந்திருப்பது தெரியவந்தது. அவருடைய ரத்தத்தில் அனுமதிக்கப்படும் ஆல்கஹால் அளவைவிட 3 மடங்கு அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குரறித்த பெண்ணின் கார் சுரங்கப்பாதையில் சிக்கியதன் காரணமாக ரயில் சேவை இரண்டு மணி நேரத்துக்கு பாதிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.