துல்ஹிரிய ஆடை தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா!


இலங்கை முதலீட்டுச் சபைக்கு உரிய ஹொரணையில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் பெண் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் இதற்கு முன்னர் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட குருகொட தொழிற்சாலையில் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, துல்ஹிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணி புரிந்து வந்த நபரொருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவரது மனைவி மற்றும் குழந்தைக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளரான பெண்ணும் குறித்த தொழிற்சாலையின் வேறொரு பிரிவில் பணி புரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருடன் நெருங்கிப் பழகிய சுமார் 100 பேர் இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காய்ச்சல் மற்றும் வயிறு வலி காரணமாக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதியான நபரொருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,ஹினிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹினிதும பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் கைதிகள் 12 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சிறைக்கைதிகள் 172 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.