கத்திமுனையில் கொள்ளையர் கைவரிசை!!


யாழ். நகரில் புடவை நிலையம் நடாத்தும் வர்த்தகர் ஒருவர் தீபாவளிப் பண்டிகை விற்பனை முடிந்து வீடு திரும்பிய சமயம் மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 லட்சம் ரூபா பணமும் 12 பவுண் தாலிக் கொடியும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

யாழ். நகரின் மத்தியில் இரு புடவையகம் நடாத்தும் சோமசுந்தரம் வீதியில் வசிக்கும் குறித்த வர்த்தகர் நேற்று முன்தினம் இரவு கணவனும் மனைவியுமாக வீடு திரும்பியுள்ளனர்.

இதன்போது வீட்டிற்கு அண்மையில் 3 மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஐவர் திடீரென பாய்ந்து மனைவியை இழுத்து மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தியதோடு கணவனின் கையில் இருந்த பையையும் பறித்தெடுத்துள்ளனர்.

குறித்த பையில் விற்பனைப் பணம் 6 லட்சம் ரூபாயும் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலிக்கொடி மற்றும் சங்கிலியையும் அறுத்துக்கொண்டு கொள்ளையர்கள் ஓடியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட இழுபறியில் சங்கிலி மட்டும் வீழ்ந்தமையினால் உரியவர்களின் கரத்தில் கிட்டியது.

இது தொடர்பில் பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து பொலிசார் மோப்ப நாய் சகிதம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.