மூன்றரை வருடம் கொரோனாவுடன் வாழப் பழகுங்கள் - பவித்திரா


இலங்கையில் கொரோனா தொற்று பரவலால் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை இழந்து அச்சத்தின் மத்தியில் முடங்கியு நிலையில், தினமும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன், நோயாளிகளின் மரணமும் உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த மூன்றரை வருடகாலத்திற்கு கொரோனா தொற்றுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் சில காலத்திற்கு வைரஸ் காணப்படும் என்பதால் இலங்கை அதனை எதிர்கொள்வதற்கான தனது அணுகுமுறையை மாற்றும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய அனில் ஜெயசிங்கவையும், சுகாதார அமைச்சின் பேச்சாளராக பணியாற்றிய வைத்தியர் ஜெயருவன் பண்டாரவையும் தான் பதவி நீக்கியதாக தெரிவிக்கப்படுவதையும் சுகாதார அமைச்சர் நிராகரித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.