கம்பஹாவில் அரசியல்வாதியின் குடும்பத்திற்கு கொரோனா உறுதி!!


அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கம்பஹா நகர சபை உறுப்பினரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த அரசியல்வாதியின் 3 வயது பிள்ளை உட்பட 4 பேருக்கு இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக கம்பஹா பொதுசுகாதார அதிகாரி சுபாஸ் சுஹசிங்க தெரிவித்தார்.

நேற்று வந்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து அவர்கள் நெருங்கிப் பழகிய 160 பேர் வரை தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.