மரணித்த இருவருக்கு கொரோனா!


 மரணமடைந்த 77, 78 வயதுடைய பெண்கள் இருவருக்கு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

இவர்களின் மரணத்திற்கு கொரோனாவா காரணம் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

78 வயதுடைய மூதாட்டி விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் மரணமடைந்தார் என்றும், 77 வயதுடைய மூதாட்டி திடீரென மரணமடைந்தார் என்றும், இதன்பின்னரே தொற்று உறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.