பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு!
இலங்கையில் மேலும் 356 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிங்கள அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மேலும் 356 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 285 ஆக உயர்ந் துள்ளது.
இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 803 ஆக உயர்ந் துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 562 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந் தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 370 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 297 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ள மை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை