பெண்களை மிரட்டும் வாள்வெட்டுக் குழு -நடவடிக்கை எடுக்காத பொலிஸ்


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சனி, ஞாயிறு நாட்களில் வாள்வெட்டு குழுவின் தொல்லை தாங்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் விதவை பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும் வாள்வெட்டு குழு மிரட்டல் விடுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கதைப்பவர்களின் ஒலி வடிவங்கள் பதிவு செய்யப்பட்டு பொலிசாருக்கு கொடுத்தும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று (15) காலை வாளுடன் வெட்ட வந்தவர்களை பிடித்த கிராம இளைஞர்கள் அதில் ஒருவரை பிடித்து வீட்டில் கட்டி வைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இதேவேளை தேராவில் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக வாள்களுடன் நடமாடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் வாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.