மாவீரர் நாள் ஊடக சந்திப்பு தொடர்பில் சிஐடி விசாரணை!

 


மன்னரில் கடந்த 25ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பு தொடர்பிலும் அதில் கலந்து கொண்ட 4 பேரிடமும் இன்றைய தினம் (1) காலை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் மற்றும் பிரேம் குமார் ஆகியோரிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்களை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றத்தினூடாக மன்னார் பொலிஸார் தடை உத்தரவை பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 25ம் திகதி குறித்த குழுவினரினால் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது. குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர்.

குறிப்பாக அன்றைய தினம் வீடுகளில் விளக்கேற்றுங்கள் என தெரிவித்த கருத்து தொடர்பாகவும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.