“அனைவருக்கும் நன்றி” சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

 


உயர் தரத்திலான பக்கவிளைவற்ற கொரோனா தடுப்பூசி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக சுகாதார அமைச்சு உயர்மட்ட நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் சுகாதார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

அன்றாட வாழ்விற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொரோனாவை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பங்களிக்கும் சகல தரப்பினருக்கும் எமது நன்றியை தெரிவிக்கிறோம்.

வருமானம் இழந்தவர்களுக்கு 05 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதோடு தனிமைப்படுத்தப்படுவோருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

கொரோனா தடுப்பிற்கு மத்தியில் பொருளாதாரம் மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கட்டம் கட்டமாக பல்வேறு பரிசோதனை வகைகளை அதிகரித்து வருகிறோம்.

தெளிவான திட்டம் மற்றும் பொறிமுறையுடன் கொரோனா தடுப்பிற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உயர் தரத்திலான தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி இன்னும் பரீட்சார்த்த நிலையிலே இருக்கிறது.தடுப்பூசி உற்பத்திக்கு எப்பொழுது அனுமதி வழங்கப்படுமென இன்னும் தெரியாது.

எமது பொருளாதாரத்திற்கு தாங்கக் கூடிய பாதுகாப்பான தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும்.இதற்காக உயர்மட்ட நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.