இயக்கச்சியில் சுற்றிவளைப்பு!


 கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடி பொருட்களுடன் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இயக்கச்சி பனிக்கையடி எனும் கிராமத்தில் சில வெடிபொருட்கள் பொதுமகன் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு இன்று இராணுவத்தினர் பொலிசார் மற்றும் புலனாய்வாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல மணிநேர தேடுதலில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ன. கைது செய்யப்பட்டவர்கள் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.