யாழ் மாவட்டத்தில் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன!


 யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை புரேவி சூறாவளியால் பெய்த கடும் மழையால் 15,459 குடும்பங்களை சேர்ந்த 51,602 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், 6 நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்.மாவட்டத்தில் தற்போது 36 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 976 குடும்பங்களை சேர்ந்த 3,540 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 53 வீடுகள் முழுமையாகவும், 2,008 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி, கோப்பாய், வேலணை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.