வட்டவளை ஆடை தொழிற்சாலையில் 10 பேருக்கு கொரோனா!


 நுவரெலியா – வட்டவளையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (23) மாலை வெளியாகிய பி.சி.ஆர் அறிக்கையில் நான்கு ஆண்களுக்கும், ஆறு பெண்களுக்குமாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14ம் திகதி வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்த வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து, அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் அறிக்கை நேற்று மாலை வெளியாகிய போதே குறித்த பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, ஏற்கனவே பி.சி.ஆர் பரிசோதனை செய்த 60 பேரின் குடும்பங்களை சேர்ந்த 200 பேர் வரையில் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.