கோரளைப்பற்று பிரதேச செயலகத்தின் முப்பெரும் விழா!


 மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் 2019ம் – 2020ம் ஆண்டுக்கான பிரதேச கலாசார விழாவும் வாழை மடல் 06வது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும் அடங்கலான முப்பெரும் விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் இலக்கியத்திற்கு பங்காற்றிமைக்காக எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத்தும் இளம் கலைஞர் கௌரவிப்பில் ஏ.எல்.எம்.நௌபர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் பிரதேசத்தில் கலைத்துறைக்கு பங்காற்றிய பத்து பேருக்கு கலைஞர் சுபதம் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கலாசார அலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நடத்திய முப்பெரும் விழா நிகழ்வில் பிரதேச கலைஞர்களதும் பாடசாலை மாணவர்களதும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு கலாசார விழாவை முன்னிட்டு நடத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.