உடல் தகனத்துக்கு எதிராக மஸ்கெலியாவில் போராட்டம்!
கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) நுவரெலியா – மஸ்கெலியவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டன.
மஸ்கெலியா நகரில் மலையக சிவில் அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் அமைதி போராட்டம் நடைபெற்றது.
இலங்கை அரசே கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் உரிமையை உறுதிப்படுத்து எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு பதாதைகளையும் வெள்ளை கொடிகளையும் ஏந்தி சுமார் ஒரு மணித்தியாலம் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை