இன்று 669 பேருக்கு உறுதியானது!
கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (05) இதுவரை 669 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23,674 ஆக உயர்ந்துள்ளது.
இதனுடன் இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 27,228 ஆகும்.
இதேவேளை மொத்தமாக 20,090 பேர் குணமடைந்துள்ளதுடன், இப்போது 7,008 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை