யாழில் இன்று 9 பேருக்கு தொற்று!


 யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (23) 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூட பரிசோதனையில் இனுவிலை சேர்ந்த ஒருவருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட பரிசோதனையில் மல்லாகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர், சிறுவிளானில் ஒருவர், காங்கேசன்துறையில் இருவர் என மொத்தம் 9 பேருக்கு தொற்று உறுதியானது.

இதேவேளை கிளிநொச்சி – பாரதிபுரத்தில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.