சீனா அரசின் உதவியுடன் ஹொரனையில் புதிய சிறைச்சாலை!
ஹொரனயில் 200 ஏக்கர் நிலத்தில் சிறைச்சாலை வளாகமொன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதனை சீன அரசின் ஆதரவோடு அமைக்கப்படவுள்ளது என்றும் இது தொடர்பாக அமைச்சக அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறைச்சாலையை விரைவாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
புதிய சிறைச்சாலை முழுமையாக பல வசதிகளுடன் கூடியதாக இருக்கும் என்று சிறைச்சாலை இராஜாங்க மற்றும் கைதிகள் மறுவாழ்வு அமைச்சர் லொகான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சிறைச்சாலையில் ரிமாண்ட் வசதி, புனர்வாழ்வு வசதி, ஒரு தொழிற்பயிற்சி மையம் மற்றும் விளையாட்டு வசதி என்பன இருக்கும்.
"இந்த புதிய வசதிகளுடன் நிர்மாணிக்க சீன அரசாங்கத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று அவர் கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை