லண்டனில் உயிழந்த சுபாசினிக்கு கொரோனா உறுதி!


இலண்டன் லூசியம் பகுதியில் வாழ்ந்துவந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி தமிழன்புவின் இறுதி நிகழ்வுகள் நேற்றையதினம் ஹரோ கென்ரன் பகுதியில் அமைந்துள்ள Om Funeral Care Ltd இல் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய கொரோனா நோயத் தொற்று நெருக்கடியில், பிரித்தானிய அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட,திட்டங்களுக்கு அமைவாக இறுதி வணக்க நிகழ்வுகளை ஏற்பாட்டாளர்கள் ஒழுங்கசெய்திருந்தனர்.

தமிழன்பு என்று அழைக்கப்பட்ட பா சுபாசினி கொரோனா தொற்று காரணமான உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து குறுகிய கால இடைவெளியில் இடம்பெற்றுள்ள இத்துயர சம்பவம் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை தமிழன்பு என்று அழைக்கப்பட்ட சுபாசினி ஒரு பிள்ளையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.