ஜேர்மனியில் கோர விபத்து!

 


ஜேர்மனியில் கார் ஒன்று பாதசாரிகளை மோதித்தள்ளிய சம்பவத்தில் ஒன்பது மாத குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஜேர்மனியின் மேற்கு பகுதி நகரமான டிரையரில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவோ அல்லது மதரீதியாகவோஇடம்பெற்றதாக தாம் கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகர மேயர் இந்த சம்பவத்தை "பயங்கரமானது" என்று விவரித்தார்.

இந்த சம்பவத்தில் 25 மற்றும் 73 வயதுடைய இரண்டு பெண்கள், 45 வயது ஆண் மற்றும் ஒன்பது மாத குழந்தை அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.