ஒரு வாரத்தில் இடைக்கால விசாரணை அறிக்கை!


 மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த தான் நியமித்த குழு ஒரு வாரத்தில் இடைக்காலஅறிக்கையை சமர்ப்பிக்கும் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் அரசாங்கம் என்ற விதத்தில் இந்த சம்பவம் தொடர்பில் தாம் கவலை அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்றை தான் நியமித்துள்ளதாகவும், அவர்களின் முழுமையான அறிக்கை ஒரு மாத காலப் பகுதிக்குள் தமக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிடையில், ஒரு வாரத்தில் குறித்த குழு, இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.