மாணவிக்கு காய்ச்சல்; வீட்டிற்கு அனுப்பிய அதிபர்!


 வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவருக்கு திடீர் காய்ச்சல் காரணமாக அவரை மீண்டும் வீட்டிற்கு திருப்பி அனுப்பி, குறித்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு சென்ற தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு பாடசாலையில் திடீர் என சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த மாணவி 11 மணியளவில் பாடசாலை அதிபரினால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .

அத்துடன் இவ்விடயம் குறித்து அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கும் தகவல் வழங்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இதனால் பாடசாலைக்கு எவ்விதமாக இடையூறுகளும் இன்றி பாடசாலை இடம்பெற்று வருவதாகவும் பெற்றோர்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார் .

எனினும், மாணவிக்கு சாதாரண காய்ச்சல் என்பதையே தற்போது கூற முடியும் என அப்பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவி மீது நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்போம் என்று மேலும் தெரிவித்துள்ளனர் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.