இன்று 530 பேருக்கு தொற்று உறுதி!
கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (28) இதுவரை 530 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 37,901 ஆக உயர்ந்துள்ளது.
இதனுடன் இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 41,584 ஆகும்.
இதேவேளை மொத்தமாக 33,221 பேர் குணமடைந்துள்ளதுடன், இப்போது 8,172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை