மாட்டில் பாதியை இறைச்சிக்காக வெட்டிச்சென்ற விசமிகள்!


 முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் காணியில் கட்டிவைக்கப்பட்ட பசு மாட்டினை இறச்சிகாக வெட்டிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அண்மை நாட்களாக முள்ளியவளைப்பிரதேசத்தில் கால்நடைகளை களவாக வெட்டி கொண்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இன்னிலையில் நேற்று இரவு (16) கேப்பாபிலவு பகுதியில் சொந்த காணியில் கட்டிவைக்கப்பட்ட மாட்டினை கட்டிய கயிற்றினை கூட அவிட்காமால் கொலைசெய்து இரண்டு பின்னங்கால்வளையும் இறச்சிக்காக திருடியுள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் மாட்டின் உரிமைளாயர் முறையிட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.