மனைவியை கொன்ற கணவன்!


 கொழும்பு – முல்லேரியா பகுதியில் நபர் ஒருவர் அவரது மனைவியை பொல்லால் தாக்கி கொலைச் செய்துள்ளார்.

அங்கொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கணவனுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற குடும்ப பிரச்சினையின் காரணமாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது கணவன் அவரது மனைவியை பொல்லால் தாக்கியுள்ளார். சம்பவத்தின் போது படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.