உரும்பிராய் பொதுச் சந்தை மூடப்பட்டது!


 உரும்பிராய் பொதுச் சந்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

ஏற்கனவே கெரோனா தொற்றால் பீடிக்கப்பட்டவரிடம் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் அவர் உரும்பிராய் பொதுச் சந்தையில் நடமாடியதைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் சுகாதார ஆலோசனை பெறப்பட்டு மீளத் திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் தவிசாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.