இறக்குமதி ரெடிமேட் ஆடைகளுக்கு இனி வரி!
2021 ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் தைத்த (readymade) ஆடைகளுக்கு புதிய வரியை அறவிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
புதிய வரியின்படி இறக்குமதியாகும் ஆடைகளின் விலை 200 ரூபாயால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தைத்த ஆடை உற்பத்தியாளர்களின் நன்மை கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை