திருக்கோவிலில் மீன்கள் கரையொதிங்கின!
அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் இரு தினங்களாக இறந்த நிலையில் அதிகளவில் கலப்பு மீன்கள் கரையொதுங்கியுள்ளன.
இப்பிரதேசத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த மழையின் பின்னர் நேற்றில் இருந்து இவ்வாறு இறந்த நிலையில் கலப்பு மீன்கள் கரையொதுங்கியுள்ளது.
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை பிரதேசத்தில் இவ்வாறு கலப்பு மீன்கள் அதிகளவில் கரையொதுங்கி காணப்படுவதுடன், மீன்கள் அனைத்தும் இறந்து அழுகிய நிலையில் உள்ளன.
கருத்துகள் இல்லை