நீரோடையிலிருந்து மீட்கப்பட்ட கொரோனா ஆடைகள்!


 கிரிதலே- பக்கமூன பிரதான வீதியின் கபர போக்குவ பிரதேசத்தின் நீரோடை ஒன்றிலிருந்து கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையின் போது அணிவிக்கப்படும் பாதுகாப்பு ஆடைகள் பல மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்திலுள்ள விசேட தேவையுடைய ஒருவரால் இந்த ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சில கண்ணாடி போத்தல்களும் பையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த நீரோடையின் நீர் கிரிதலே குளம் வரைக்கும் செல்வதுடன், சாதாரண மக்களும் இந்நீரை பயன்படுத்துவதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகள் குறித்த விசேட தேவையுடைய நபராலேயே எரியூட்டப்பட்டுள்ளன.

சுகாதார அதிகாரிகள் கவனயீனத்தால் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றதா? என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.