ஒத்துழையுங்கள்: இல்லையேல் கைது நிச்சயம்!


 புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு பொலிஸார் இன்று வலியுறுத்தியுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிலர் சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள சிலர் சுகாதார அதிகாரிகளுக்கு உதவவில்லை என கூறினார்.

அவ்வாறு சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை நிராகரித்தால், அவர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய கைது செய்யப்படுவார்க்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.