வீதியில் சென்றவர் மின்சாரம் தாக்கி பலி!


 அம்பாறை – களுவாஞ்சிகுடி, துறைநீலாவணை பகுதியில் நேற்று (21) மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் துறைநீலாவணை 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான முருகேசு புலேந்திரன் (வயது-61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் இரும்புக்கத்தியை வீதியால் எடுத்துச் செல்லும்போது, வீதியின் அருகாமையிலுள்ள மின்மாற்றியின் உயரழுத்தம் மின்சாரக்கம்பியில் தவறுதலாகப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த நபர், மின்சாரத்தால் தாக்கப்பட்டு வீதியில் இழுத்து வீசப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.