மீசாலையில் சற்றுமுன் ஒருவர் கொலை!


 தென்மராட்சி – மீசாலை வடக்கு, தட்டான்குளம் வீதியில் இன்று (25) மதியம் இனந்தெரியாத நபர்களினால் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இராமாவில் ஜே/320 கிராம சேவகர் பிரிவை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை மோகனதாஸ் (51-வயது) என்பவரே குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீதியால் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர்கள் இந்த கொலையை புரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நெஞ்சிலும் கையிலும் கடுமையான கத்திக் குத்துக் காயங்களுடன் உயிருக்கு போராடிய குடும்பஸ்தர் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.