முல்லைத்தீவு பகுதியில் கொரோனா அபாயம் அதிகரிப்பு!

 


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்குத் தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது ; ஏராளமானோர் பாதிக்கப்படும் அபாயம்

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்குத் தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது என்பதால் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.
அதனால்அது நிறையப் பேருக்குப் பரவியிருக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து கொரோனா நிலவரம் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தொற்றாளருக்கு அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஏனைய வகை கொரோனாக்களை விடவும் அதி வீரியம் கூடியது.
இதனால் அங்கு பலருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது.இந்த வகை கொரோனாத் தொற்றாளர்கள் நோய் அறிகுறிகள் தென்படாத நிலையிலேயே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
எனவே, புதுக்குடியிருப்பில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த சிரத்தையெடுத்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
நேற்று அடையாளம் காணப்பட்ட குறித்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை சுகாதார உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்தி தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றிக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.