அல்வாயில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்!


அல்வாயில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவர் இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அவரின் உடற்கூறுகள் பாகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 அல்வாய் கிழக்கு கையிலன் பிரதீபன் வயது 38 என்பவர் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு முச்சக்கரவண்டி ஒன்றில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி தடம்புரண்டுள்ள நிலையில் வீதியில் கிடந்துள்ளார். அவரை அந்த வழியால் வந்த நபர் ஒருவர் அழைத்துச் சென்று வீட்டில் விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில் நள்ளிரவில் அவரின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து அவரை பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. வியாழக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். பிரதே பரிசோதனையில் இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூறுகள் பகுப்பாய்வுக்கு கொழும்புக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.