சுகாதார நடைமுறைகளை மீறும் இராணுவத்தினர்!


நெல்லியடி பகுதியில் இராணுவத்தினர் பலர் முகக் கவசம் அணியாது சுகாதார நடைமுறைகளை மீறி நடமாட்டம் மேற்கொண்டு வருவதாக பொது மக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொது மக்கள் சில வேளைகளில் தவறுதலாக முகக் கவசம் அணியாது வீதியில் நடமாடினால் பொலீஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினில் எச்சரிக்கப்படுவதுடன் சிலருக்கு வழக்கும் தாக்கல் செய்கின்றனர். ஆனால் நெல்லியடி பகுதியில் சுமார் 30ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் முகக்கவசம் அணியாது பொதுச் சந்தை, அதிஷ்டலாப சீட்டிழுப்பு விற்பனை நிலையம்,  வர்த்தக நிலையங்கள் என்பவற்றில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டுற்ளனர். 

இது தொடர்பாக நெல்லியடி பொலீஸார் மற்றும் பொறுப்பான சுகாதார பரிசோதகர்களை கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.