நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க மிகப் பெரிய செயல் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.
போரூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு சவால்களை இந்தியா சந்தித்து வருகிறது.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சிறந்த மருத்துவ வசதிகளையும் சுகாதாரக் கட்டமைப்புகளையும் உருவாக்கித் தருவது என்பது அதில் முக்கியமானதொரு சவாலாக உள்ளது. மத்திய அரசைப் பொருத்தவரை இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்தை சுகாதார வசதிகளுக்காக ஒதுக்கி வருகிறது.
இது பிற வளா்ந்த நாடுகள் செலவிடும் தொகையைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 1.5 லட்சம் மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும், மருத்துவ உலகமும், முன்களப் பணியாளா்களும் அா்ப்பணிப்பு உணா்வோடு உழைத்து வருகின்றனா்.
கொரோனா தடுப்பூசிகளைப் பொருத்தவரை அவற்றை விநியோகிக்க மிகப் பெரிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை