நெல்லியடி டயலொக் நிறுவனம் மூடல்!


நெல்லியடி பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனம் சற்று முன்னர் கரவெட்டி சுகாதார பணிமனையால் மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை புலோலி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் சென்ற இடங்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதன் ஒர் அங்கமாக குறித்த தொற்றாளர் நெல்லியடி டயலொக் நிறுவனத்திற்கு கடந்த 30ம் திகதி சுமார் ஒரு மணித்தியாலம் தமது சேவையைப் பெறுவதற்காக நின்றுள்ளதாக தெரியவந்துள்ளது.  இதனையடுத்து கரவெட்டி சுகாதார பணிமனையால் டயலொக் நிறுவனத்தை சற்று முன்னர்  மூடுமாறு பணித்துள்ளனர். அத்துடன் குறித்த 30ம் திகதி டயலொக் நிறுவனத்திற்கு வருகை தந்தவர்கள் தாமாகவே முன்வந்து கரவெட்டி சுகாதார பிரிவுக்கு 0212261006 எனும் இலக்கத்துடனோ அல்லது 24 மணி நேர சேவையில் ஈடுபடும் 0212226666 எனும் இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.