கஞ்சாவை பிரகடனப்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் தேரர்!


 இலங்கையில் மருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்த வேண்டுமென பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர் ஆயுர்வேத திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இராஜாங்க அமைச்சரிடம் இந்த கோரிக்கையை நேரடியாக தேரர் முன்வைத்திருந்தார்.

அத்தோடு வௌ்ளைக் காரர்கள் அனுமதி இன்றி கஞ்சா பயிரிடமும் பயன்படுத்தவும் முடியாது என்றே தடை விதித்திருந்ததாக நாலக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் 1984ம் ஆண்டு எந்தவொரு முறையிலும் கஞ்சாவை பயன்படுத்தக் கூடாதென சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது என தேரர் கேள்வி எழுப்பினார்.

மேலும் கஞ்சா என்பது மருந்து பொருள் எனவும் புத்த பெருமான் இதனை மருந்து பொருளாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஏன் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு எதிர்காலத்தில் இந்த மருந்தை பயன்படுத்தி நோயாளர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

உள்நாட்டு மருந்துக்கு தேவையான கஞ்சாவை பயிரிட அனுமதி அளிக்கப்பட வேண்டுமென பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.