நேற்று 4 கொரோனா மரணங்கள்!


 மேலும் 4 கொரொனா மரணங்கள் நேற்று (25) பதிவாகின. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த, 49 வயதான பெண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவுக்கு (IDH) மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி விஷமடைவு மற்றும் புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (24) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி விஷமடைவு, அவையவங்கள் செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரகாகொட பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (24) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, குருதி விஷமடைவு, அவையவங்கள் செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்த, 71 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (24) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் இருதய செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.