வவுனியா செட்டிக்குளத்தில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்!


 வவுனியா செட்டிக்குளத்தில் இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றிற்குள் புகுந்து இன்று அதிகாலை (23.01) தாக்குதல் மேற்கொண்டத்தில் குறித்த வீட்டின் தளபாடங்கள், பொருட்கள் கடும் சேதத்திற்குள்ளானது.

செட்டிக்குளம் சண்முகபுரம் கிராமத்தில் வீடு ஒன்றிற்குள் வா.ள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் தாக்குதல் மே.ற்கொண்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சண்முகபுரத்தில் வசித்துவரும் ஒருவருடைய வீட்டிற்கு பட்டா ரக வாகனத்தில் வந்த பத்து பேர் கொண்ட கும்பலே தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த நபரின் மகனை தேடி வந்த வாள்வெட்டுக் கும்பல் அவரது மகன் இல்லாத காரணத்தினால் வீட்டை அடித்து உடைத்து நாசம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.