வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா!


வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகார பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 665 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவற்றில் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களில் தொற்று அறியப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்பட்டு இருந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் புத்தளத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.