ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!
ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணியில் வைத்து விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கும் கொவிஷீல்ட் எஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை