வட மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனா!

 


வடமாகாணத்தில் நேற்றையதினத்தில் மேலும் 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 431 பேருக்கு கோவிட்- 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்போது வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவருக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.