கொரோனாவிலிருந்து மேலும் 912 பேர் குணமடைவு!


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 912 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்து 235 ஆக காணப்படுகின்றது.

இதில் 4 ஆயிரத்து 817 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 711 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 365 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.