குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது- ஜனாதிபதி!!

 


ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (வியாழக்கிழமை) அவர் ஆற்றிய விசேட உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய வங்கி முறிகள் மோசடி குற்றச்சாட்டு தொடரல்பாகவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.