யாழ்ப்பாண தீவில் மின்திட்டம்!


இலங்கையின் வட பகுதியில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையாகும் என சீனா தெரிவித்துள்ளது.

அத்துடன் , சர்வதேச ஏல நடைமுறைகளுக்கு அமையவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மின் உற்பத்தி திட்டம் குறித்த இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், எந்தவொரு நாடாக இருந்தாலும், நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் , சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை பிராந்தியத்தில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வரை, இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதன் மூலமாக மாத்திரமே, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் நாட்டின் தொடர்ச்சியான அபிவிருத்தி ஆகியவற்றை உறுதி செய்ய முடியும் எனவும், சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.