கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து!!

 


கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நெல் ஏற்றி சென்ற பாரஊர்தியின் சாரதி நித்திரை கொள்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். இதன்போது யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பாரஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் சென்று மோதியுள்ளது.

குறித்த விபத்தில் மோதிய பாரஊர்தி, பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், சாரதி சாதாரண காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.